Posts

Showing posts from August, 2021

சீரும் சிறப்பும்

Image
  யாருக்காக.... ************* யாருக்காக/ அழகாய் சிரித்தாய்/ தளிர்நடை நடந்து வந்தாய்/ கட்டி அணைத்து எனை முத்தமிட்டாய்/ என்னுயிர் கண்ணம்மா நீயே என் செல்வம்/

ஹைக்கூ கவிதை

Image
பலவண்ணப் பச்சோந்தி/ அடிக்கடி நிறத்தை மாற்றும்/ ரசிக்கும் பட்டாம்பூச்சி/

நில்..சொல்..வெல்..

Image
  அன்னையின் கடமையில் தந்தைக்கும் பங்குண்டு// அழுத்தமாய் அறிவிக்கும்  அழகான சேவலொன்று// ஆணும் பெண்ணும் இணைந்து நடத்தும்// இனிய தாம்பத்தியம் என்றும் இன்பமே//

இலையுதிர் காலம்

Image
நினைவூட்டும் முதுமையை// விழுந்த இலைகள் சொல்லும் மரணத்தை// சொந்தமும் பந்தமும்  நிலையாய் இல்லை// வாழ்வெனும் மாயை வந்தது வீழ்ந்தது//

புதுக் கவிதை போட்டி

Image
  என்னுயிரே/ எண்ணமெல்லாம் நீயே/ ஏக்கம் எந்தன் மனமெல்லாம்/ கண்ணுறங்காது காத்திருப்பது உன் வரவுக்காக/ விரைந்து வந்து எனக்கு மகிழ்ச்சி தருவாய்/

சொல்லோடு விளையாடு

Image
சுட்டியான குட்டிப்பெண்/ 2 பட்டுடை கட்டி  சிட்டுப்போல்/3 வட்டமடிக்க எட்டிப்போனாள்/2

விலகாது காக்கும் விரைந்து

Image
கந்தனது மந்திரம் சிந்தையில் வைத்து// நித்தமும் அவனருள் வேண்டியே நின்று// நற்றுணை நீயென்று பணிந்து  தொழுதிட// விலகாது காக்கும் விரைந்து//

நில்...சொல்...வெல்...

Image
 நில்...சொல்...வெல்... ****************** மதம் பிடித்த மதமே நில்லாதே// மனம் விரும்பும் மதத்தை தள்ளாதே// ******************* குழலூதும் கண்ணனுடன்  புர்க்காவில்  அன்னை// எம்மதமும் சம்மதமே ஏற்றங்கள் கிடைத்தால்//

இல்வாழ்க்கை என்றும் இனிது..

Image
இன்பமும்  மங்கா இனிமை  இருந்திட மன்னவன் காதலில் மங்கை மகிழ்ந்திட செல்லமாய்  பிள்ளைகள் தங்கமாய்த் தாங்கிட இல்வாழ்க்கை என்றும் இனிது .

இருவரிக் கவிதை

Image
முதுகில் சுமை  முகத்தில் ஆனந்த சிரிப்பு மழையிலும் மகிழ்ச்சி..

நன்மை..தீமை

Image
  நன்மையில் நலம்  தீமையில் அல்லல். அறம் காக்கும் மறம் அழிக்கும். இன்பம் அகத்திலே  துன்பம் புறத்திலே. நிகழ்காலம் அறிவோம்.. எதிர்காலம் அறியோம்.